உன்னையும் உன் குணத்தையும்
நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் மலருது...
எத்தனை எத்தனை நினைவுகள்
எல்லாமே சுகமாக
இருக்குது..
அக்கா நீ .... என் சாப்பாட்டில்
ஒரு துண்டு கேட்பாய்... அனாலும்
நான் தரமாட்டன்...
அது ஏன் என்று தெரியாது...
நீ என்ன செய்வாய்.....
வலுக்கட்டாயமாய் சிறு துண்டு பாணை
பறிப்பாய் ............
நான் என்ன செய்வேன் ..........
அப்படியே பானை...போட்டுவிட்டு
நகர்ந்து விடுவேன்..
நீ அந்த துண்டு பாணை
தரும்வரையும் நான் சாப்பிட மாட்டேன்
அது உன் பாச விளையாட்டு
நான் பெரியவனாய் ஆனபிறகும்
உன் விளையாட்டு தொடர்ந்தது..
நினைத்து பார்க்க
சுகமாகவும் சுமையான வலியாகவும்
இருக்குது..
No comments:
Post a Comment