Wednesday, December 8, 2010

அக்காவின் நினைவுகள் -தங்கை உனக்காக எழுதியது

அக்காவின் நினைவுகள்

காலத்தின் நினைவுகளால்
கனத்துவிட்ட உறவுகளால்
கண்களிலே கருமணியாய்
காவியத்தின் நினைவுகளால்
உடன் பிறந்த சகோதரியே!
உயிராக நினைக்கின்றேன்- உன்
உணர்வுள்ள உறவுதனை
உயிர்த்துவிட்ட உயிரே !
உன்னை விட்டு -உன்
உயிர்தான் போனாலும்
காலமெல்லாம் நிலைத்திடுமே
கனிவான உன் பாசம்
கடந்த பல வருடங்கள் போல
உன் பிரிவினால் ஏங்கும்

அன்புச் சகோதரி
கீத்தா-

அக்காவின் நினைவுகள்-வலி இல்லை அனாலும் மனது நிறையுது

உன்னையும் உன் குணத்தையும்
நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் மலருது...
எத்தனை எத்தனை நினைவுகள்
எல்லாமே சுகமாக
இருக்குது..
அக்கா நீ .... என் சாப்பாட்டில்
ஒரு துண்டு கேட்பாய்... அனாலும்
நான் தரமாட்டன்...
அது ஏன் என்று தெரியாது...
நீ என்ன செய்வாய்.....
வலுக்கட்டாயமாய் சிறு துண்டு பாணை
பறிப்பாய் ............
நான் என்ன செய்வேன் ..........
அப்படியே பானை...போட்டுவிட்டு
நகர்ந்து விடுவேன்..
நீ அந்த துண்டு பாணை
தரும்வரையும் நான் சாப்பிட மாட்டேன்
அது உன் பாச விளையாட்டு
நான் பெரியவனாய் ஆனபிறகும்
உன் விளையாட்டு தொடர்ந்தது..
நினைத்து பார்க்க
சுகமாகவும் சுமையான வலியாகவும்
இருக்குது..

அக்காவின் நினைவும் பகிர்வும்

ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...